நம்பிக்கை தரும் தர்ம கர்ம யோகம்

நம்பிக்கை தரும் தர்ம கர்ம யோகம்

பாக்கியமும் ஜீவனமும் இணைந்திருந்தால், யோகம் உங்களை உயா்த்தி நிறுத்தும்.

ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டின் அதிபதியும் பத்தாம் வீட்டின் அதிபதியும் இணைந்து இருந்தால், அதனை தர்ம கர்ம யோகம் என்று அழைக்கிறோம். இத்தகைய யோகம் உள்ளவர்கள் வாழ்க்கையில் எளிதில் முன்னேற்றம் காண்பார்கள்.

ஆனால் இந்த யோகம் தீய கிரகங்களின் தொடா்பினை பெற்றிருந்தால், அதன் பலன்களில் வேறுபாடு உண்டாகும்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வரின் ஜாதகம்

இந்த யோகத்தின் சிறப்பை விளக்கும் சிறந்த உதாரணம் — மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரின் ஜாதகம்.
அவருடைய ஜாதகத்தில் வேறு எதுவும் குறிப்பிடத்தக்க யோகமாக எதுவும் இல்லை; ஆனால், தர்ம கர்ம யோகம் தனித்து செயல்பட்டு அவரை உயர்ந்த பதவிக்கு எழும்பச்செய்தது.

ஜாதக விவரம்

லக்னம்: கன்னி

9ம் வீட்டின் அதிபதி: சுக்கிரன்

10ம் வீட்டின் அதிபதி: புதன்
இருவரும் கடக ராசியில் இணைந்து தர்ம கர்ம யோகத்தை உருவாக்குகிறார்கள்.

கன்னி லக்னத்திற்குச் சுக்கிரன் வலிமையான யோக கிரகம். அந்த சுக்கிரன் இந்த யோகத்தில் இருப்பதால், யோகம் மிகுந்த பலத்தைப் பெற்றுள்ளது. மேலும், லக்னாதிபதி புதனும் இதில் இணைந்திருப்பதால், யோகம் பிரகாசமான பலன்களை அளிக்கிறது.

குரு-சந்திர யோகம்

கன்னி லக்னத்தில், 5ம் வீட்டில் குரு மகரத்தில் நீச்சம் பெற்றுள்ளான். ஆனால் அவனுடன் சந்திரனும் இணைந்திருப்பதால், குரு-சந்திர யோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகம், குருவின் நீச்சத்தை நீக்கி (நீச்ச பங்க யோகம்) வலிமையான பலன்களைத் தருகிறது.

மேலும், குரு-சந்திர யோகம் மற்றும் தர்ம கர்ம யோகத்தின் கிரகங்கள் பரஸ்பர சம சப்தம நிலையில் இருப்பதால், இரண்டும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.

பஞ்ச பரிவர்த்தன யோகம் – ஸ்ரீ கணபதி யோகம்

இவரின் ஜாதகத்தில்:

பத்தாம் வீட்டின் அதிபதி புதன் — கடகத்தில்,

கடகத்தின் அதிபதி சந்திரன் — மகரத்தில்,

மகரத்தின் அதிபதி சனி — பத்தாம் வீட்டில் உள்ளான்.

இதன் மூலம் புதன், சந்திரன், சனி ஆகிய மூவருக்கும் பரிவர்த்தனையோகம் ஏற்பட்டுள்ளது. இதனை ஸ்ரீ கணபதி யோகம் என்றும் கூறுவர்.

அவரின் முதலமைச்சர் பதவிக் காலம் சனி தசை மற்றும் புதன் தசை காலத்தில்தான் நீடித்தது.

யோகங்கள் இணையும் போது பலம் பெரும்

ஒரு தனி யோகம் மட்டும் வாழ்க்கையில் பெரிய பலனைத் தராது.
ஒரு யோகம் மற்றொரு யோகத்தால் தூண்டப்படும்போது தான், இரண்டும் வலிமை பெறும்.

அவருடைய ஜாதகத்தில்,

தர்ம கர்ம யோகம்,

குரு-சந்திர யோகம்,

ஸ்ரீ கணபதி யோகம் —
இந்த மூன்று யோகங்களும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், ராஜயோகம் உருவாகியுள்ளது.

யோகங்களில் தொடா்புடைய கிரகங்கள் — குரு, சந்திரன், புதன், சுக்கிரன், சனி.

இந்த அமைப்பினால்தான் அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தார்; இது உண்மையான ராஜயோகம் எனலாம்.

நம்பிக்கை தரும் தா்ம கர்ம யோகம்

பாக்கியமும் ஜீவனமும் இணைந்திருந்தால் யோகம் உங்களை உயா்த்திவிடும்

ஒன்பதுக்குரியவன் பத்துக்குரியவன் இணைந்திருக்கும் ஜாதகா்கள் வாழ்க்கையில் எளிதாக முன்னேற்றம் காண்கிறாா்கள்.

தா்மம் கர்மம் யோகம் என்று சொல்ப்படும் இந்த யோகமானது தீயா்வாகளின் தொடா்பினை பெற்றிருந்தால் யோகத்தின் அளவில் மாறுதல் காணப்படும்

மேற்கு வங்க முன்னாள் முதல்வா் ஜாதகத்தில் இந்த தா்ம கர்ம யோகத்தினை பார்க்க முடிகிறது

அவருடைய ஜாதகத்தில் வேறு எந்த வலிமையான யோகங்களும் கிடையாது.

இந்த தா்ம கர்ம யோகமானது தனித்து போராடி அவரை முதல்வராக்கி அழகு பார்த்தது.

வாருங்கள் அவருடைய ஜாதகத்தினை பார்வையிடுவோம்

பிறந்தது கன்னி லக்னம்

9ம் வீட்டுக்குரியா் சுக்கிரன்

10ம் வீட்டுக்குரியவா் புதன்

இருவரும் இணைந்து கடகத்தில் தா்ம கர்ம யோகத்தினை கொடுக்கிறாா்கள்.

கன்னி லக்னத்திற்கு பலமான யோகத்தினை செய்யும் சுக்கிரன் இந்த யோகத்தில் இருப்பதால் இந்த யோகம் பலம் பொருந்திய யோகமாக மாறிவிட்டது.

கன்னி லக்னத்திற்கு லக்னாதிபதியே இந்த யோகத்தில் தொடா்பில் இருப்பதால் யோகம் பிரகாசமான பலன்களை கொடுத்தது

கன்னி லக்னத்திற்கு 5ல் குரு நீச்சம் பெற்றாா்

கன்னி லக்னத்திற்கு 5ல் மகரத்தில் நீச்சம் பெற்ற குருவும் சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகம் கொடுக்கிறாா்கள்.

குரு பெற்ற நீச்சமானது குரு சந்திர யோகத்தினால் நீச்ச பங்கம் பெற்று பலம் வாய்ந்த யோகமாக மாறுகிறது.

இப்போது பாருங்கள் குரு சந்திர யோக கிரகங்கள் தா்ம கர்ம யோக கிரகங்களோடு சம சப்தமத்தில் இருக்கிறாா்கள்.

பஞ்ச பாிவா்த்தன் யோகங்களில் ஸ்ரீ கணபதி யோகம்

இவருக்கு பத்தாமிடத்து அதிபதி புதன் கடகத்தில்

கடகத்தின் அதிபதி மகரத்தில்

மகரத்தின்அதிபதி சனி பத்தில்

புதன் சந்திரன் சனி மூவரும் இணைந்து பரிவா்த்தனை பெற்றதாலி் ஸ்ரீ நந்தி யோகம் கிடைத்தது.

 இவருடைய முதலமைச்சா் ஆட்சி காலமானது சனி தெசை மற்றும் புதன் தெசையில் நீடித்தது.

எந்த ஒரு தனித்த யோகமும் வலிமையான யோகப்பலன்களை தந்துவிடாது

மற்றொரு யோகத்தினால் ஒரு யோகமானது தூண்டப்பட்டால்தான் இரண்டு யோகங்களும் வலிமை பெறுகிறது.

இவருக்கு தா்ம கர்ம யோகம் ஏற்பட்டிருக்கிறது

இவருக்கு குரு சந்திர யோகம் ஏற்பட்டிருக்கிறது

இவருக்கு ஸ்ரீ கணபதி யோகம் ஏற்பட்டிருக்கிறது

இந்த மூன்று யோகங்களும் இணைவினை பெற்றதால்தான் இவருக்கு ராஜாளும் யோகம் கிடைத்தது.

யோகத்தில் தொடா்புடைய கிரகங்கள் குரு சந்திரன் புதன் சுக்கிரன் சனி 

இந்த அமைப்பினால்தான் இவா் ராஜயோகத்தினை பெற முடிந்தது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *